உள்ளூர் செய்திகள்

கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது.


கல்வராயன் மலை பகுதியில் கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது

Published On 2023-05-13 07:28 GMT   |   Update On 2023-05-13 07:28 GMT
  • போலீசார் கல்வராயன்மலை பகுதியில் அதிரடியாக கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர்.
  • கோவிந்தராஜ் (வயது 48) மற்றும் சந்திரன்(39) ஆகிய இருவரும் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

கள்ளக்குறிச்சி:

தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சாவேட்டை 4.0 நடைபெற்று வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கஞ்சா வேட்டை நடத்த உத்தரவிட்டார். அதன்படி கரியாலூர் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை பகுதியில் அதிரடியாக கஞ்சா வேட்டை யில் ஈடுபட்டனர். அப்போது எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 48) மற்றும் வேங்காடு கிராமத்தைச் சேர்ந்த சந்திரன்(39) ஆகிய இருவரும் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ கஞ்சாவை பறி முதல் செய்து போலீசார் கோவிந்தராஜ் மற்றும் சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News