உள்ளூர் செய்திகள்

திருநாவலூர் அருகே மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

Published On 2023-07-02 12:50 IST   |   Update On 2023-07-02 12:50:00 IST
  • திருநாவலூர் அருகே மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருவாலூர் அருகே உடையனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 40), சோனக்கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (49). இவர்கள் அதே ஊரில் மதுபாட்டில் விற்பனை செய்து வந்தனர். இது குறித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த திருநாவலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News