உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் விவசாயியை தாக்கிய 2 பேர் கைது

Published On 2023-02-19 14:52 IST   |   Update On 2023-02-19 14:52:00 IST
  • ராஜரத்தினம் தேயிலை தொழிற்சாலை அருகே நின்று கொண்டிருந்துள்ளார்.
  • 2 வட மாநில வாலிபர்கள் அங்கு வந்து, ராஜரத்தினத்துடன் தகராறில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்துள்ளனர்.

ஊட்டி,

கோத்தகிரி அருகே உள்ள குமரன் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜரத்தினம் (வயது 60). விவசாய கூலித் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று கட்டபெட்டு இண்ட்கோ தேயிலை தொழிற்சாலை அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது குடிபோதையில் 2 வட மாநில வாலிபர்கள் அங்கு வந்து, ராஜரத்தினத்துடன் தகராறில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். திடீரென ஆத்திரமடைந்த அவர்கள் கீழே கிடந்த காலி மது பாட்டிலை எடுத்து ராஜரத்தினத்தின் தலையில் அடித்து காயப்படுத்தியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அவர் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட வெளி மாநில வாலிபர்களை தேடி வந்தனர். போலீசாரின் விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ராஜன் பிஷோ கர்மா என்பவரது மகன் கிரிஷ் பிஷா கர்மா (19), மற்றும் ராஜு சுனார் என்பவரது மகன் மந்தீப் சுனார் (19) ஆகிய இருவர் என்பதும், இவர்கள் கூலித் தொழிலாளிகளாக பணி புரிந்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News