உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்து கொண்டவர்கள்.

15-ம் ஆண்டு கால பைரவாஷ்டமி விழா

Published On 2022-12-16 15:48 IST   |   Update On 2022-12-16 15:48:00 IST
  • திருச்சுவான கொடி ஏற்றமும், வல்லமை விநாயகர் நகர் வலமும் நடந்தன.
  • தீந்த மிழ் வேள்வியும், சிறப்பு பூஜைகள், யாகமும் நடந்தது.

பர்கூர்,

கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் 15-ம் ஆண்டு கால பைரவாஷ்டமி விழா தொடங்கி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது.

விழா நாட்களில் திரு முறை தீந்தமிழ் வேள்வியும், திருச்சுவான கொடி ஏற்றமும், வல்லமை விநாயகர் நகர் வலமும் நடந்தன.

நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு, பெரிய புராண பாராயணம், திருவிளக்கு பூஜை, வள்ளி தேவ சேனை உடனுறை முருகன் காவடியாட்டத்துடன் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து முளைப்பாரி, மாவிளக்கு ஊர்வலம், காளி யம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், திருமுறை தீந்த மிழ் வேள்வியும், சிறப்பு பூஜைகள், யாகமும் நடந்தது.

தொடர்ந்து கந்திகுப்பம் பைரவ சுவாமிகள் தலைமையில் பைரவநாதர், திரிபுரபைரவி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.

Similar News