உள்ளூர் செய்திகள்

கோட்டூர் அரசு பள்ளியில் 15 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்று போக்கு

Published On 2023-06-24 08:53 GMT   |   Update On 2023-06-24 08:53 GMT
  • கிச்சைக்காக சேர்க்கப்பட்ட 15 மாணவர்களில் 12 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பினர்.
  • அரசு பள்ளியில் தாசில்தார், மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 460 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

நேற்று பள்ளியில் பணியில் இருந்த சத்துணவு அமைப்பாளர் கோசலை மற்றும் உதவியாளர்கள் அருக்காணி, கிருஷ்ண வேணி ஆகியோர் மதிய உணவாக சாதம், சாம்பார், முட்டை ஆகியவை தயார் செய்தனர். பின்னர் அவர்கள் பள்ளிக்கு வருகை தந்த 260 மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.

மதியம் 1.30 மணிக்கு மதிய உணவு சாப்பிட்ட 8-ம் வகுப்பு படிக்கும் சஞ்சய் (வயது13), அபிநவ் (13), 7-ம் வகுப்பு படிக்கும் சபீர் அகமது (12), கவின் பிரசாத் (12), ஜீவா(12), மாடசாமி (12), லோகேஷ் (12), கிஷோர் (12), சுந்தரேசன் (12), முகமது சமீர் (12), ஈஸ்வரன் (12), 6-ம் வகுப்பு படிக்கும் தினேஷ் (12), அஸ்வின் (11),செய்யது அகமது (11), ரித்தீஷ் (11) ஆகிய 15 மாணவர்களுக்கு வயிற்று போக்குடன் வாந்தி ஏற்பட்டது.

வாந்தி எடுத்தவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தர்மராஜ் ஆசிரியர்கள் உதவியுடன் மீட்டு ஆட்ேடாவில் கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். வாந்தி எடுத்த மாணவர்களின் லோகேஷ், சபீர் அகமது, முகமது சபீர் ஆகியோர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் கிடைத்ததும் வால்பாறை டி.எஸ்.பி. கீர்த்திவாசன், ஆனைமலை தாசில்தார் ரேணுகாதேவி, மாவட்ட கல்வி அலுவலர் முருகேஷ் ஆகியோர் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் மாணவர்களை சந்தித்து உடல் நலன் குறித்து விசாரித்தனர். சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 15 மாணவர்களில் 12 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பினர். 3 மாணவர்கள் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஆனைமலை தாசில்தார் ரேணுகாதேவி, மாவட்ட கல்வி அலுவலர் முருகேஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News