உள்ளூர் செய்திகள்

பீரோவில் பொருட்கள் சிதறி கிடக்கின்றன.

ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை கொள்ளை

Published On 2022-10-03 10:13 GMT   |   Update On 2022-10-03 10:13 GMT
  • இது குறித்து கைலாசம் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
  • அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

திருவாரூர்:

திருவாரூர் அருகே வெள்ளக்குடியை சேர்ந்தவர் கைலாசம். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

இந்த நிலையில் கைலாசம் தனது பேரக்குழந்தை சர்வேஷை விஜயதசமியை முன்னிட்டு பள்ளியில் சேர்க்க உள்ளதால் அதற்கு முன்பாக கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மனைவி வளர்மதி, மருமகள் பிரவீனா ஆகியோருடன் சென்றுள்ளார்.

சாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது முன்பக்க கதவு மற்றும் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் வீட்டில் உள்ள ஒரு மர பீரோ மற்றும் இரண்டு ஸ்டீல் பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 14 பவுன் நகைகள் திருடு போயிருந்தன.

இது குறித்து கைலாசம் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News