பணம் வைத்து சூதாடிய 14 பேர் கைது
- போலீசார் பாலிகானப்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
- 2 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உட்கோட்டம் பாகலூர் போலீசார் பாலிகானப்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அந்த ஊரை சேர்ந்த கிருஷ்ணப்பா (29), மனோகர் (29), பிரகாஷ் (32), நாகேந்திரன் (36), முனிகிருஷ்ணா (29), அமர்நாத் (32) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,110 மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல சூளகிரி போலீசார் தொட்டூர் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய செம்பரசனப்பள்ளி அருகே உள்ள கட்டிகானப்பள்ளியை சேர்ந்த முருகேசன் (38), மாரண்டப்பள்ளி தங்கபாண்டியன் (32), ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேர் தப்பி ஓடி விட்டனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.1,500 பறிமுதல் செய்யப்பட்டது. ஓசூர் அட்கோ போலீசார் முனிதேவி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு புறம்போக்கு நிலத்தில் அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்த முனிதேவி நகர் ரமேஷ்குமார் (27), மாதேஷ் (34), பாலாஜி நகர் குமார் (40), முல்லைவேந்தன் நகர் சண்முகம் (33), கோவிந்தசாமி (40), முனிதேவி நகர் தங்கவேல் (47) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.