உள்ளூர் செய்திகள்

14 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இலகுரக நவீன செயற்கை கால்களை தஞ்சை மருத்துவகல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் வழங்கினார்.

14 மாற்றுதிறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்கள்

Published On 2022-07-02 08:08 GMT   |   Update On 2022-07-02 08:08 GMT
  • இதில் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள 14 இலகுரக நவீனசெயற்கைக்கால்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
  • இவர்களுக்கு வழங்கிய செயற்கைகைகள் விரல்களை நீட்டி மடக்கும் படியும் பொருட்களை எடுத்து பயன்படுத்தும் படியும் இருக்கும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 14 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இலகுரக நவீனசெயற்கைக் கால்களை தஞ்சை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் தலைமையில் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் முடநீக்கியல் துறையில் வழங்கப்பட்டது. பேராசிரியர் டாக்டர் ஆறுமுகம்,உதவி நிலைய மருத்துவர்செல்வம்,தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்து வமனையின் நிலைய மருத்துவர் முஹமதுஇத்ரீஸ் ஆகியோர் வாழத்துரை வழங்கினர்.

தலைவர் மருத்துவர் குமரவேல் , உடலியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவத் துறை நிபுணர் பாலமுரளி, டாக்டர் ரமேஷ், ஆர்தோடிஸ்ட் செயற்கை அவயங்கள் உடலியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வுத துறைதஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர் மற்றும் இதர உடலியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வுத் துறை, செயற்கை அவயங்கள் துறை பணியாளார்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். முதலமைச்சரின்விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்ட மாவட்ட அலுவலர் ராஜா மற்றும் அனைத்து மருத்துவமனை ஊழிய ர்கள்,செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

இதில்ரூ.13 லட்சம் மதிப்புள்ள 14 இலகுரக நவீனசெயற்கைக்கால்கள் பயனாளிகளுக்கு வழங்க ப்பட்டன . இவற்றையும் சேர்த்து மொத்தம் இதுவரை 135 செயற்கை கை மற்றும் கால்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 20 பேர் கைகளை இழந்தவர்கள். இவர்களுக்கு வழங்கிய செயற்கை கைகள் விரல்களை நீட்டி மடக்கும் படியும் பொருட்களை எடுத்து பயன்படுத்தும் படியும் இருக்கும். மேலும் 115 நபர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், அரியலூர் ,புதுகோட்டை, திருவாரூர், நாகப்பட்டடினம், மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவ ட்டங்களில் உள்ள பய னாளி களு க்கு பயன ளிக்கும் வகை யில் இவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த செயற்கை கை கால்களில் ஏற்படும் ஏதா வதுசிக்கல்களை உடனடி யாகத்தீர்க்க வும் முடியும். இந்த செய ற்கை கை கால்கள் முதலமை ச்சரின் விரிவான மருத்து வக் காப்பீட்டுத்தி ட்டத்தின் கீழ் வழங்க ப்பட்டது. கை கால்களை இழந்த நோயாளிகள் உடலியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவத் துறை வெளி நோயாளி பிரிவை அணுகலாம். ஊனமுற்றோர் அட்டை இல்லாதவர்களும் கால்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News