கஞ்சா, லாட்டரி, குட்கா விற்ற 11 பேர் கைது
- கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
- ரூ. 2100 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்–தில் உள்ள ஓசூர் சிப்காட், சூளகிரி, மத்திகிரி, பாகலூர் ஆகிய பகுதிகளில் போதை தடுப்பு போலீசார் சோதனை செய்தனர்.அப்போது கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1000 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று வேப்ப–னபள்ளி, போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரையில் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீசார் ரோந்து சென்ற–போது தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்பனை செய்த 5 பேர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 2100 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதே போன்று ஓசூர், சூளகிரி ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.இதேபோன்று பாகலூர் போலீசார் ரோந்து சென்றபோது, போயப்பன்–குட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை கைது செய்தனர். அவர்க–ளிடம் இருந்து ரூ.350-யை போலீசார் பறிமுதல் செய்தனர்.