பங்குனி உத்திரம் நாளில் மாமல்லபுரம் கடற்கரையில் 101 ஜோடிகளுக்கு திருமணம்
- ஒரு கோடி ரூபாய் செலவில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
- ஆசியாவின் மிகப்பெரிய திருமண ஏற்பாட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கோவளம் சாலையில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலின் கடற்கரையில், டபிள்யூ.வி.கனெக்ட் நிறுவனம் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் மாற்றுத்திறனாளி உள்ளிட்ட 101 ஜோடிகளுக்கு, 1 கோடி ரூபாய் செலவில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் அப்சராரெட்டி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா, தட்சிணாமூர்த்தி, நந்தினி விஜய் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன.
ஆசியாவின் மிகப்பெரிய திருமண ஏற்பாட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வரும் நிலையில் 3 ஆம் நாளான இன்று, மிகபிரமாண்டமாக இந்த திருமணங்கள் மாமல்லபுரத்தில் நடைபெற்றது., 101 புதுமண தம்பதிகளுக்கும், தாலி, பட்டுப்புடவை, வேட்டி சட்டை, ஒரு மாதத்திற்கு தேவையான சமையல் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், படுக்கை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன. ஜியோ பவுண்டேஷன் மற்றும் மதர் எர்த் பவுண்டேஷன் ஆகியற்றுடன் இணைந்து தகுதிவாய்ந்த 101 ஜோடிகளை மிக கவனமாக தேர்ந்தெடுத்துள்ளனர்.