உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் 1 ½ கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

Published On 2023-11-01 09:05 GMT   |   Update On 2023-11-01 09:05 GMT
  • போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
  • அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

கடலூர்:

கடலூர் முதுநகர் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடலூர் அடுத்த கண்ணாரபேட்டையில் தடை செய்யப்பட்ட கஞ்சாவை 2 பேர் வைத்திருந்தனர். அவர்களிடமிருந்த ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் கடலூர் பச்சையாங்குப்பம் சேர்ந்த தீனா (வயது 20), கண்ணாரப்பேட்டை சேர்ந்த செந்தில்குமார் (வயது 19) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதே போல் ராமநத்தம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரை நிறுத்தி சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த நபரையும், கஞ்சாவும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில் திட்டக்குடி புலிகரம்பலூர் சேர்ந்த ராஜ்குமார் (34) என்பதும், அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News