செய்திகள்
நோட்டா

9 தொகுதிகளிலும் 9,610 வாக்குகள் பெற்ற நோட்டா

Published On 2021-05-04 10:31 GMT   |   Update On 2021-05-04 10:31 GMT
யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற நோட்டா பட்டனை 9,610 பேர் அழுத்தி தங்கள் வாக்கை, எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
கடலூர்:

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு யாராவது வாக்களிக்க விரும்பவில்லை என்றால், அவர்களுக்கு என வாக்குப்பதிவு எந்திரத்தின் கடைசியில் நோட்டா என்ற பட்டன் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த பட்டனை அழுத்தி அவர்கள் தங்கள் பதிவை, எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள்.

இந்த நடைமுறை கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற நோட்டா பட்டனை 9,610 பேர் அழுத்தி தங்கள் வாக்கை, எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News