செய்திகள்
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் முன்னிலை
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக முருகுமாறன் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் சிந்தனைசெல்வன் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தங்க.விக்ரம் நாம் தமிழர் கட்சி நிவேதா உள்பட 13 பேர் போட்டியிட்டனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை சி.முட்லூர் அரசு கலை கல்லூரியில் இன்று தொடங்கியது முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப் பட்டன. இந்த தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக முருகுமாறன் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் சிந்தனைசெல்வன் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தங்க.விக்ரம் நாம் தமிழர் கட்சி நிவேதா உள்பட 13 பேர் போட்டியிட்டனர். முதல் சுற்று ஓட்டு எண் ணிக்கை விபரம் வருமாறு:-
முருகுமாறன் (அ.தி.மு.க) -3,561
சிந்தனை செல்வன் (வி.சி.க) -2,731
ஓட்டு வித்தியாசம் -830