செய்திகள்
பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காட்சி.

விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் தீவிர வாக்கு சேகரிப்பு

Published On 2021-03-20 16:38 GMT   |   Update On 2021-03-20 16:38 GMT
விருத்தாசலத்தில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் தொகுதியில் அ.ம.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் விருத்தாசலம் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் திரு.வி.க. நகர் மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளிவாசல் சென்று முஸ்லிம்களிடம் ஆதரவு திரட்டினார். பின்னர் விருத்தாசலம் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்டார். 

இதைத்தொடர்ந்து விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள ராஜகோபாலசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது தே.மு.தி.க., அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News