செய்திகள்
விஜய பிரபாகரன்

அ.தி.மு.க.வுக்கு இனி இறங்கு முகம்தான்- விஜய பிரபாகரன்

Published On 2021-03-09 09:18 GMT   |   Update On 2021-03-09 09:18 GMT
எடப்பாடி பழனிசாமி அவரது சொந்த தொகுதியிலேயே தோல்வி அடைவார் என விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
பண்ருட்டி:

பண்ருட்டியில் தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசியதாவது:-

அ.தி.மு.க.வுடன் கூட்டணி தர்மத்துக்காக பொறுமையாக இருந்தோம். ஆனால் அ.தி.மு.க.வினர் எங்களை உதாசினப்படுத்தினர். எனவே தான் கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம்.

கூட்டணியில் இருந்ததால் நம் கைகள் கட்டப்பட்டிருந்தது. இப்போது சுதந்திர பறவையாக உள்ளோம். இனி அ.தி.மு.க.வுக்கு இறங்கு முகம்தான். தே.மு.தி.க. தயவால் தான் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தது.

எடப்பாடி பழனிசாமி தன்னை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்று நினைக்கிறார். இதனை அ.தி.மு.க.வினர் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். சாணக்கியனாக இருந்தது போதும். இனி சத்திரியனாக இருக்க வேண்டும். விஜயகாந்த், பிரேமலதாவை தனித்தனியாக பார்த்திருப்பீர்கள். இனி அவர்கள் 2 பேரையும் சேர்த்து என் உருவத்தில் பார்ப்பீர்கள்.

எடப்பாடி பழனிசாமி அவரது சொந்த தொகுதியிலேயே தோல்வி அடைவார்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News