செய்திகள்

போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று ரஜினியுடன் தமிழருவி மணியன் சந்திப்பு

Published On 2018-07-11 09:32 GMT   |   Update On 2018-07-11 09:32 GMT
சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று காலை நடிகர் ரஜினியுடன் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். #Rajinikanth #TamilaruviManian
சென்னை:

அரசியல் பிரவேசம் செய்துள்ள ரஜினிகாந்த் புதிய படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு மேற்கு வங்காளத்தில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பினார்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி ரஜினிகாந்த் அதிரடி அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிட உள்ளார்.

புதிய கட்சியின் பெயரையும் ரஜினிகாந்த் அறிவிக்கிறார். இது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் ரஜினி காந்தை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். சுமார் 1 மணி நேரம் ரஜினியுடன் அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனை நடத்தினார்.


‘ஒரு மாதம் கழித்து ரஜினி சென்னை வந்துள்ளதால் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பேசினேன்.

விரைவில் மக்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அறிவிப்புகளை ரஜினி வெளியிடுவார். எந்தவித சோர்வும் இல்லாமல் அவர் உற்சாகமாக இருக்கிறார்’.

இவ்வாறு அவர் தெரிவித்தார். #Rajinikanth #TamilaruviManian
Tags:    

Similar News