செய்திகள்

தி.மு.க.வுடன் கை கோர்த்துக்கொண்டு அ.தி.மு.க.வை அழிக்க துடிக்கும் தினகரனின் கனவு பலிக்காது - ஜெயக்குமார்

Published On 2018-06-27 09:27 GMT   |   Update On 2018-06-27 09:27 GMT
தி.மு.க.வுடன் கை கோர்த்துக்கொண்டு அ.தி.மு.க.வை அழிக்க துடிக்கும் தினகரனின் கனவு பலிக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #TTVDhinakaran #Jayakumar

சென்னை:

வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றியை விளக்கப் பொதுக்கூட்டம். மாவட்ட செயலாளர் டி. ஜி. வெங்டேஷ்பாபு எம் பி தலைமையில் கொளத்தூர் தொகுதி மங்காரம் தோட்ட பகுதியில் நடந்தது. கூட்டத்தில் மீன் வளம் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

ஆர்.கே.நகரில் பொது மக்களிடம் 20 ரூபாய் நோட்டை காட்டி ஏமாற்றி ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற தினகரன் மீது இப்போது அப்பகுதி மக்கள் கோபத்தில் உள்ளனர்.


தினகரன் எப்படிப் பட்டவர் என்பதை தெரிந்து தான் அம்மா சுமார் 10 வருட காலம் போயஸ் கார்டன் பக்கமே வரவிடவில்லை. தி.மு.க.வுடன் தினகரன் கை கோர்த்துக் கொண்டு அ.தி.மு.க.வை அழித்து விடலாம் என்று எண்ணுகிறார். அவரது கனவு ஒரு நாளும் பலிக்காது. அ.தி.மு.க. இரும்பு கோட்டை அதை யாராலும் அழிக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் தாடி மா.ராசு, அமுதா, சிந்தை ஆறுமுகம், ஓட்டேரி பி. கே ஜெயக்குமார், செங்கை கோவிந்தராஜ், எஸ்.அமீனுதீன், எ.எல் நடராஜன், எஸ் எ. அண்ணாமலை, பத்மேடு சாரதி, எம். மகேந்திரன், வெற்றி நகர் ஜீவா, எம் சந்திரசேகர், பி.வேலு, உஷாராணி, சமிம்பானு, அருணகிரி, புரசை ராஜாராம், தனராஜா, மல்லிகா சுப்புராஜ், செந்தில்குமார், எம்.இமாச்சலபதி, பி.அரசு, ஐ.அம்பேத்கர், திருமங்கலம் மோகன், புரசை கே.சேகர், ஜி.ஆர். பி. கோகுல், சாந்தி, எஸ் சத்தியநாராயணன், முனிரத்தினம், வேணு, அயன்புரம் முரளிதரன், திருமங்கலம் பிரபு, தங்கம் துரைசாமி, கொளத்தூர் கிருபா. அகரம் ரவிச் சந்திரன், உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் கொளத்தூர் கே. கணேசன் நன்றி கூறினார். #TTVDhinakaran #Jayakumar

Tags:    

Similar News