செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகாவுக்கு சாதகமாக உள்ளது - வைகோ பேட்டி

Published On 2018-06-10 11:11 IST   |   Update On 2018-06-10 11:11:00 IST
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது கர்நாடகாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். #CauveryManagementBoard #Vaiko

மதுரை:

மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் கண்மூடித் தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக காவரி நீரை திறக்க மாட்டார்கள் என ஏற்கனவே கூறினேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது கர்நாடகாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அணை பாதுகாப்பு, சி.ஆர்.பி.எப். வீரர்களை பாதுகாப்புக்காக நிறுத்துவது போன்ற எந்த அதிகாரமும் இல்லாமல் அதிகாரமற்ற அமைப்பாக காவிரி மேலாண்மை வாரியம் உள்ளது.

தற்போது உள்ள சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மாறும் வரை நமக்கு நீதி கிடைக்காது.

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் அணை பாதுகாப்பாக உள்ளது என ஆய்வு செய்து கூறி உள்ளனர். ஆனால் இதுகுறித்து தமிழக அரசு எந்த முயற்சியும் மேற் கொள்ளவில்லை.

மேற்கண்டவாறு அவர் கூறினார். #CauveryManagementBoard #Vaiko

Tags:    

Similar News