செய்திகள்

சட்டசபையில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு - மு.க.ஸ்டாலின் விளக்கம்

Published On 2018-05-29 07:36 GMT   |   Update On 2018-05-29 07:36 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூடு பிரச்சனையை முன்வைத்து தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. இன்று வெளிநடப்பு செய்தது தொடர்பாக மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். #ThoothukudiFiring #TNAssembly #DMKWalkout
சென்னை:

சட்டசபையில் இன்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்க மறுத்ததுடன், முதலமைச்சர் பதவி விலகும்வரை இனி பேரவை நிகழ்வுகளில் திமுக பங்கேற்கப் போவதில்லை எனக் கூறினார். பின்னர் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து நிருபர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-



தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை கண்துடைப்பு நாடகம். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு முடிவு செய்தால், அமைச்சரவையை உடனடியாக கூட்டி கொள்கை முடிவை எடுத்து தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும்.

துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரிப்பதற்காக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் என்பது ஏமாற்று வேலை. துப்பாக்கி சூட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். துப்பாக்கி சூட்டுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiFiring #TNAssembly #DMKWalkout

Tags:    

Similar News