செய்திகள்

நதிகள் இணைப்பு பற்றி ரஜினி பேசியதை வரவேற்கிறேன்- அமைச்சர் சி.வி.சண்முகம்

Published On 2018-05-12 10:15 GMT   |   Update On 2018-05-12 10:15 GMT
நதிகள் இணைப்பு பற்றி நடிகர் ரஜினிகாந்த் பேசியதை வரவேற்பதாக விழுப்புரம் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். #TNMinister #CVeShanmugam #Rajinikanth
விழுப்புரம்:

விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நதிகள் இணைப்பு பற்றி நடிகர் ரஜினிகாந்த் பேசினார். இதனை நான் வரவேற்கிறேன். ஆனால் அவரின் சொந்த மாநிலமான கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆனால், ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் காவிரி நீருக்காக போராட்டம் நடத்தி மக்களை குழப்பத்திற்கு ஆளாக்கி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #CVeShanmugam #Rajinikanth
Tags:    

Similar News