செய்திகள்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் அதிகாரப் போட்டி நடக்கிறது: எச்.ராஜா பேட்டி

Published On 2017-07-30 12:11 IST   |   Update On 2017-07-30 12:11:00 IST
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் அதிகாரப் போட்டி நடக்கிறது என எச்.ராஜா கூறினார்.

காரைக்குடி:

தமிழக பா.ஜனதா செயற்குழு கூட்டம், காரைக்குடியில் நேற்று தொடங்கியது. இதில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச். ராஜா, மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் முன்னாள் மாநில தலைவர் லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. உட்கட்சி பிரச்சினைகளில் பா.ஜனதாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிகார போட்டி தான் அ.தி.மு.க.வில் நடக்கிறது இ.பி.எஸ்.க்கும், ஓ.பி.எஸ். க்கும் தான் தர்மசங்கடம்.

தமிழ்நாட்டில் ஊழலை அறிமுகப்படுத்தியது திராவிட கட்சிகள் தான். நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு எதிரானது அல்ல.அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வால் எந்தவித பாதிப்பும் இல்லை .ஒரு தலை பட்சமான செய்தியை காதில் வாங்காமல் செயல்பாட்டில் முனைப்பாக இருக்க வேண்டும்.

மதிப்பெண் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண் கிடைக்கவில்லை என ஏங்கிய மாணவர்களின் அநீதிக்கு கிடைத்த தீர்வு தான் நீட் தேர்வு. தனியார் மருத்துவ கல்லூரி நடத்துபவர்கள் தான் நீட் தேர்வுக்கு எதிராக தூண்டி விடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News