லைஃப்ஸ்டைல்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: திகட்டாத தின்பண்டம் சாக்லேட் பனீர் கொழுக்கட்டை

Published On 2018-09-12 15:43 GMT   |   Update On 2018-09-12 15:43 GMT
இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று சாக்லேட் பனீர் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
திகட்டாத தின்பண்டத்தில் குழந்தைகளின் பட்டியலில் சாக்லேட்டிற்கே முதலிடம், அதிகமாக செயற்கை இனிப்பு மற்றும் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால் உடல் நலம் கருதி பெற்றோர்கள் அதை வெகுவாக தவிர்த்தும் குழந்தைகளை கண்டித்தும் வருகின்றனர். ஆனால் சாக்லேட்டின் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ள தூய கோகோ பவுடர் இருதய நோய்கள் வராமல் காத்து, தோலுக்கு ஊட்டமளிக்கும். அதனுடன் பனீர் சேர்த்து கொழுக்கட்டையாக, குழந்தைகளுக்கும் பெரியவர்களும் ஆரோக்கியமான இனிப்பாக சாப்பிட தரலாம். பன்னீரில் உள்ள புரோட்டீன் எலும்பு, பற்களுக்கு ஊட்டமளித்து, நல்ல எதிர்ப்புசக்தியை தூண்டுவதாகவும் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

கிளறிய அணில் கொழுக்கட்டை மாவு 
கோகோ பவுடர் - 1டேபிள் ஸ்பூன் 
பனீர் துருவல் - 1 கப் 
சர்க்கரை போடாத பால்கோவா -50 கிராம் 
பொடித்த சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன் 
பிஸ்தா, பாதம் சிறிதளவு

செய்முறை :

பனீர் துருவல், சர்க்கரை போபோடாத பால்கோவா, பொடித்த சர்க்கரை, பாதம் மற்றும் பிஸ்தாவை ஒன்றாக சேர்த்து பிசைந்து பூரணமாக தயார்செய்து கொள்ளவும். 

மேல் மாவுடன் கோகோ பவுடரை சேர்த்து நன்றாக பிசைந்து தயாராக உள்ள பூரணத்தை அதனுள் வைத்து கொழுக்கட்டை அச்சில் பிடித்து 6-7 நிமிடங்கள்  வேகவைக்கவும். அணில் தயாரிப்புகளை ஆன்லைனில் பெற, இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் - https://shop.theanilgroup.com/
Tags:    

Similar News