சமையல்

இட்லி, தோசைக்கு அருமையான தக்காளி குருமா

Published On 2022-06-06 09:04 GMT   |   Update On 2022-06-06 09:04 GMT
  • தக்காளி குருமாவானது தோசைக்கு மட்டுமின்றி, சாதத்திற்கும் அருமையாக இருக்கும்.
  • தக்காளி குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தக்காளி - 3

வெங்காயம் - 1

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது

உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு...

துருவிய தேங்காய் - 1/4 கப்

சோம்பு - 3/4 டீஸ்பூன்

இஞ்சி - 1/4 இன்ச்

பச்சை மிளகாய் - 1

பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

கசகசா - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 3 டீஸ்பூன்

பட்டை - 1/4 இன்ச்

கிராம்பு - 2

ஏலக்காய் - 1

பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

தக்காளியில் இருந்து பச்சை வாசனை போன பின்னர், அதில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், தக்காளி குருமா ரெடி!!!

Tags:    

Similar News