- குழந்தைகளுக்கு கொத்து பரோட்டா செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.
- ரோட்டு கடையில் செய்யும் கொத்து பரோட்டாவை எப்படி வீட்டில் செய்வது குறித்து காணலாம்..
தேவையான பொருள்கள்:
பரோட்டா - 2
முட்டை - 1
வெங்காயம் - 2
எண்ணெய் - 4 ஸ்பூன்
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 8 பல்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.
செய்முறை:
* தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பரோட்டாவை சிறிது துண்டுகளாக பிரித்து தனியாக வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி குழைய வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவேண்டும்.
* அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, தனி மிளகாய் தூள் சேர்ந்து நன்றாக பச்சை வாடை போகும் வரை கிளறி விடவும்.
* அடுத்து துண்டுகளாக நறுக்கிய பரோட்டாவை சேர்த்து மிதமான தீயில் மசாலாவுடன் சேர்த்து கலக்கவும்.
* 10 நிமிடம் கழித்து கொத்தமல்லி சிறிது சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
* சுட சுட சுவையான ரோட்டு கடை கொத்து பரோட்டா தயார்.
* இதில் சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து உண்டால் சுவையாக இருக்கும்..