சமையல்

ஹோட்டல் ஸ்டைலில் காடை பிரியாணி செய்யலாம் வாங்க...

Published On 2022-06-10 09:21 GMT   |   Update On 2022-06-10 09:21 GMT
  • காடையில் மிகக் குறைவான கொலஸ்ட்ராலும், கோழியை விடக் கூடுதல் ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
  • கோழி முட்டையில் 11% புரோட்டீன் என்றால் காடை முட்டையில் 13% புரோட்டீன்கள் உள்ளது.

தேவையான பொருட்கள் :

காடை - 4

சீரகச் சம்பா அரிசி - 750 கிராம்

வெங்காயம் - 150 கிராம்

தக்காளி - 100 கிராம்

பச்சை மிளகாய் - 5

புதினா இலை - 50 கிராம்

கொத்தமல்லித்தழை - 50 கிராம்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

தயிர் - 50 மில்லி

தேங்காய்ப்பால் - 100 மில்லி

பட்டை - 2

ஏலக்காய் - 2

கிராம்பு - 4

பிரிஞ்சி இலை - ஒன்று

இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 100 மில்லி

நெய் - 50 மில்லி

பிரியாணி மசாலா செய்ய :

பட்டை - 2

ஏலக்காய் - 4

கிராம்பு - 6

பூண்டு - 50 கிராம்

இஞ்சி-1 துண்டு

செய்முறை :

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

காடையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்க வேண்டும்.

சீரகச் சம்பா அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பிரியாணி மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்து ஆறியதும், தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக சிவக்க வறுக்க வேண்டும்.

அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கி, தக்காளி சேர்த்து அது குழையும் வரை வதக்க வேண்டும்.

அடுத்து அதில் கழுவி சுத்தம் செய்த காடையை சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அரைத்த பிரியாணி மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

இத்துடன் தயிர், தேங்காய்ப்பால் தேவையான அளவு தண்ணீர், கழுவிய சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து 10 நிமிடம் வேகவிட்டு, பின்னர் தீயை மிதமாக்கி நெய் ஊற்றி கிளறி, புதினா இலை, கொத்தமல்லித்தழை தூவி மூடி போட்டு 20 நிமிடம் தம் போட்டு இறக்க காடை பிரியாணி தயார்.

Tags:    

Similar News