பெண்கள் உலகம்

மிக்ஸ்டு முளைகட்டிய பயறு அடை

Published On 2018-10-03 11:35 IST   |   Update On 2018-10-03 11:39:00 IST
டயட்டில் இருப்பர்கள், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்து கொள்வது நல்லது. இன்று மிக்ஸ்டு முளைகட்டிய பயறு அடை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி - ஒரு கப்
முளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப்
முளைகட்டியகொண்டைக்கடலை - கால் கப்
முளைகட்டிய கருப்பு உளுந்து - 2 டீஸ்பூன்
முளைகட்டிய கொள்ளு - 5 டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 3
தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கேரட் துருவல் - கால் கப்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு



செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

பிறகு அரிசியுடன், முளைகட்டிய பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, கருப்பு உளுந்து, கொள்ளு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, வெங்காயம், கேரட் துருவல் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

தோசைக்கல்லைக் காயவைத்து மாவை சற்று கனமான அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

சத்தான மிக்ஸ்டு முளைகட்டிய பயறு அடை ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News