லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த கம்பு சிறுகீரை அடை

Published On 2018-08-14 04:18 GMT   |   Update On 2018-08-14 04:18 GMT
சர்க்கரை நோயாளிகள் கம்பு, கீரையை உணவில் தினமும் சேர்த்து கொள்வது நல்லது. இன்று இந்த இரண்டையும் வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சிறுகீரை - 200 கிராம்
பச்சரிசி மாவு - 100 கிராம்
கம்பு மாவு - 300 கிராம்
முந்திரிப் பருப்பு - 50 கிராம்
நெய் - 50 கிராம்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
பூண்டுப்பல் - 8
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பூண்டுப்பல்லை நன்றாகத் தட்டி வைத்துக் கொள்ளவும்.

முந்திரி, மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக வறுத்து, பொடியாக்கிக் கொள்ளவும்.

சிறுகீரையை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி கழுவி, தண்ணீரை வடிக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும், கீரையைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

கீரையில் இருக்கும் தண்ணீர் முழுவதுமாக சுண்டியதும், நெய் சேர்த்துக் கிளறி நன்கு வதக்கி இறக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு மற்றும் கம்பு மாவைக் கொட்டி, இத்துடன் வதக்கிய கீரையைச் சேர்த்து, வெங்காயம், நன்றாகத் தட்டியப் பூண்டுப்பல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையுடன், வறுத்துப் பொடித்தவற்றை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து தளதளவென கரைத்துக் கொள்ளவும். (மாவை கெட்டியாகக் கரைத்தால் கம்பு மாவு வேகாது).

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

சூப்பரான சத்தான கம்பு சிறுகீரை அடை ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News