லைஃப்ஸ்டைல்

சத்தான குதிரைவாலி தக்காளி தோசை

Published On 2018-07-30 04:15 GMT   |   Update On 2018-07-30 04:15 GMT
மசாலா தோசை, பொடி தோசை, ரவா தோசை என பலவிதமான தோசைகளை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று குதிரைவாலி அரிசி, தக்காளி சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி - 4 கப்
உளுந்து - 1 கப்
தக்காளி - 2
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
வெந்தயம் - கால் டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் 3 மணிநேரம் ஊறவைத்து தோசைக்கு அரைப்பது போல் அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவில் உப்பு சேர்த்து கலந்து 4 மணிநேரம் புளிக்க விடவும்.

தக்காளி, இஞ்சி, சீரகத்தை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த விழுதை புளித்த மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

சத்தான குதிரைவாலி தக்காளி தோசை ரெடி.

இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. விருப்பப்பட்டால் தேங்காய் சட்னியுடன் சுவைக்கலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News