லைஃப்ஸ்டைல்
சத்து நிறைந்த அரிசி கடலைப்பருப்பு உருண்டை
காலையில் டிபனாகவும், மாலையில் ஸ்நாக்ஸாகவும் சாப்பிட சத்தான உணவு இந்த அரிசி கடலைப்பருப்பு உருண்டை. இன்று இந்த உருண்டை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - ஒரு கப்,
துருவிய இஞ்சி, மாங்காய் - சிறிதளவு,
ஊற வைத்த கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய், கொத்தமல்லி விழுது - சிறிதளவு,
நெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
பச்சரிசியை வெறும் கடாயில் போட்டு வறுத்து ரவை போல் உடைத்து கொள்ளவும்.
இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவிட்டு, ஒரு டீஸ்பூன் நெய், ஊற வைத்த கடலைப்பருப்பு, உப்பு, துருவிய இஞ்சி, மாங்காய், பச்சை மிளகாய் - கொத்தமல்லி விழுது, பச்சரிசி ரவை சேர்த்துக் கைவிடாமல் கிளறி தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.
பின்னர் இந்த மாவை உருண்டைகளாகப் பிடித்து, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
இதை சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சரிசி - ஒரு கப்,
துருவிய இஞ்சி, மாங்காய் - சிறிதளவு,
ஊற வைத்த கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய், கொத்தமல்லி விழுது - சிறிதளவு,
நெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
பச்சரிசியை வெறும் கடாயில் போட்டு வறுத்து ரவை போல் உடைத்து கொள்ளவும்.
இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவிட்டு, ஒரு டீஸ்பூன் நெய், ஊற வைத்த கடலைப்பருப்பு, உப்பு, துருவிய இஞ்சி, மாங்காய், பச்சை மிளகாய் - கொத்தமல்லி விழுது, பச்சரிசி ரவை சேர்த்துக் கைவிடாமல் கிளறி தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.
பின்னர் இந்த மாவை உருண்டைகளாகப் பிடித்து, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
இதை சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.