லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு சத்தான கேரட் - தக்காளி தோசை

Published On 2018-06-26 04:16 GMT   |   Update On 2018-06-26 04:16 GMT
தோசை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு கேரட், தக்காளி சேர்த்து சத்தான கலர்புல்லான தோசை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :

பச்சை அரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப் [வேண்டுமெனில், அரை கப் அவல் கூட சேர்த்துக் கொள்ளலாம்]
தக்காளி - 1
கேரட் துருவியது - இரண்டு கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 6
பெருங்காயத் தூள் - சிறிது  
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு.



செய்முறை

அரிசியை நன்றாக கழுவி மூன்று மணி நேரம் ஊற வைத்து தோசை மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேரட், தக்காளி, மிளகாய், மிளகு, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த விழுதை மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கடைசியாக இதில் கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை சேர்த்து கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான கேரட் - தக்காளி தோசை ரெடி.

இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. விருப்பப்பட்டால் தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News