பொது மருத்துவம்

1 கிராம் உப்பை குறைத்தால்..

Published On 2022-09-08 07:12 GMT   |   Update On 2022-09-08 07:12 GMT
  • சமையல் அறையில் தவறாமல் இடம் பிடிக்கும் பொருளாக உப்பு உள்ளது.
  • சமையல் அறையில் தவறாமல் இடம் பிடிக்கும் பொருளாக உப்பு உள்ளது.

ஒரு நாளைக்கு 1 கிராம் உப்பை குறைப்பது 2030-ம் ஆண்டளவில் 90 லட்சம் இதய நோய் பாதிப்புகளை குறைக்கும். 40 லட்சம் உயிர்களை காப்பாற்றும் என்கிறது, புதிய ஆய்வு. அதற்கேற்ப உப்பின் பயன்பாடு உலகளவில் பரவலாக இருக்கிறது.

ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும் தவறாமல் இடம் பிடிக்கும் பொருளாக உப்பு உள்ளது. சமையலில் உப்பை அதிகம் உபயோகிப்பது உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கச் செய்துவிடும்.

ஹார்வர்ட் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, நரம்புகளை தூண்டுவதற்கும், தசைகளை சுருக்குவதற்கும், தளர் வடைய செய்வதற்கும், தண்ணீர் மற்றும் தாதுக்களின் சம நிலையை பராமரிப்பதற்கும் மனித உடலுக்கு சிறிதளவு சோடியம் (உப்பு) தேவைப்படுகிறது.

சீனாவில் நிகழும் கிட்டத்தட்ட 40 சதவீதம் இறப்புகளுக்கு இதய நோய்களே காரணம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்களின் கூற்றுப்படி, சீனர்கள் தினமும் 11 கிராம் உப்பை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்.

இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும். ஒரு நாளைக்கு ஒரு கிராம் உப்பை குறைப்பதன் மூலம் தமனிகளின் சீரற்ற செயல்பாடுகளால் இதய நோய் ஏற்படும் அபாயத்தை 4 சதவீதம் குறைக்க முடியும். பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 6 சதவீதம் குறைக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் தெளிவுபடுத்தி உள்ளது.

Tags:    

Similar News