லைஃப்ஸ்டைல்
சித்தாசனம்

மனதிற்கு புத்துணர்ச்சி, அமைதி தரும் ஆசனம்

Published On 2019-07-05 05:11 GMT   |   Update On 2019-07-05 05:11 GMT
இந்த ஆசனத்தை செய்வதனால், மனம் அமைதி அடையும். இரத்த ஒட்டம் சீராகி மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை :

முதலில் தரையில் அமர வேண்டும். பின்னர் இடது காலை மடித்து வலது கணுக்காலில் படும்படி மடித்து அமர வேண்டும். அடுத்தது வலது காலை மடித்து இடது தொடை மீது படும்படி செய்யவும்.

இரு கைகளையும் சின் முத்திரை தாங்கி கால் முட்டிகள் மீது வைத்து மூச்சை நிதானமாக இழுத்து விட வேண்டும். இவ்வாறு இந்த ஆசனத்தில் 20 நிமிடம் அமர வேண்டும். பிறகு கைகளை சமநிலைக்கு கொண்டு வந்த பின்னர் நிதானமாக ஒவ்வொரு காலாக பிரித்து நிமிர்த்தி அமர்ந்த பின் எழ வேண்டும்.

பயன்கள் :

இந்த ஆசனத்தை செய்வதால் மனம் அமைதி அடையும். இரத்த ஒட்டம் சீராகும். பின்புறம் மற்றும் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் குறையும். மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். குறிப்பாக இந்த ஆசனத்தை செய்வதனால், உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளை சுத்தம் செய்யப்படுகின்றன. 
Tags:    

Similar News