லைஃப்ஸ்டைல்

பார்வை கோளாறை குணமாக்கும் கருட முத்திரை

Published On 2018-10-20 04:03 GMT   |   Update On 2018-10-20 04:03 GMT
இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியாகி, பார்வை கருடனைப் போல் கூர்மையாகும். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
யோக சாஸ்த்திரத்தில் பயன்படுத்தப்படும் முத்திரைகளில் கருட முத்திரையும் ஒன்று. இதுவும் கருடாசனத்தைப்போலவே செய்வதற்கு மிகவும் எளிமையான ஒன்று. ஆனால் பலனோ மிகவும் அதிகம். அவற்றை எவ்வாறு செய்வது என்பதையும், அதன் பலன்களையும் கீழே காண்போம்.

செய்முறை :

1. முதலில் இடது கையின் மேல் வலது கையை வைக்கவும்.

2. பிறகு வலது கையின் பெருவிரலை படத்தில் காட்டியபடி இடது கையின் பெருவிரலோடு மடக்கிப் பிடிக்கவும்.

3. இனிமற்ற விரல்கள் அனைத்தையும் நேராக இறக்கையைப் போல் விரிக்கவும். இதுவே கருட முத்திரையாகும்.

கடைசியாக இறக்கையை விரித்தாற்போல் உள்ள மற்ற விரல்களை இங்கு உள்ளது போல் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுவும் கருட முத்திரையில் ஒரு வகையாகும்.

இரண்டு கட்டை விரல்களைத்தவிர உள்ள மற்ற விரல்களை இங்கு உள்ளது போல் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுவும் கருட முத்திரையில் ஒரு வகையாகும்.

குறிப்பு

இந்த கருட முத்திரையை வெறும் வயிற்றில் செய்வது கூடுதல் பலனை அளிக்கும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

பலன்கள்

1. உடல் அசதி, சோர்வு நீங்கும்.
2. உடலில் புத்துணர்ச்சி பெருகும்.
3. நினைவாற்றலை அதிகரிக்கும்.
4. பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியாகி, பார்வை கருடனைப் போல் கூர்மையாகும்.
Tags:    

Similar News