லைஃப்ஸ்டைல்
குழந்தைக்கு 2 வயது வரை எந்த உணவுகளை கொடுக்கலாம்

குழந்தைக்கு 2 வயது வரை எந்த உணவுகளை கொடுக்கலாம்

Published On 2019-07-12 06:17 GMT   |   Update On 2019-07-12 06:17 GMT
குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை எந்த உணவுகளை கொடுக்க வேண்டும், எந்த உணவுகளை கொடுக்கக்கூடாது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
குழந்தைக்கு உணவூட்ட விரும்புவோர் குழந்தைக்கு ஆறு மாதம் ஆகும் வரை மாட்டுப்பால் கொடுக்க கூடாது. அதன் பிறகு வேண்டுமானால் உணவில் மாட்டுப்பாலை சேர்த்து கொள்ளலாம். எருமை பால் வேண்டவே வேண்டாம். முட்டை சேர்த்து கொள்ளலாம். கோதுமை பண்டங்களை தரலாம்.

ஒன்பது முதல் 12 மாத குழந்தைக்கு பட்டாணி, பீன்ஸ், பருப்பு மற்றும் முட்டை ஆகியவற்றை நன்றாக வேகவைத்து மசித்து கொடுக்கலாம். குழந்தைக்கான உணவை மூன்று வேளையும் தரலாம்.

குழந்தைக்கு 2 வயது ஆகும்வரை எந்தவிதமான கொட்டைகளையம் கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது. முழு தானியங்களை ஐந்து வயதுவரை கொடுக்கக்கூடாது. தேனை ஒரு ஆண்டு நிறையும் முன்பு தர கூடாது. வேகவைத்த முட்டை மற்றும் கோதுமை பொருட்களை ஆறு மாதம் வரை தர கூடாது. பால், சிறு தானியங்கள் போன்றவற்றை குழந்தைக்கு ஐந்து மாதம் முடியும் முன்பு தர கூடாது. குழந்தைக்கு ஆஸ்துமா, எக்சிமா போன்றவை இருந்தால் குழந்தைக்கு ஒரு வயது ஆகும்வரை மீன், கோதுமை, மாட்டுப்பால் போன்றவற்றை தராமல் தவிர்க்க வேண்டும்.

குழந்தைக்கு உப்பு போட்டு தரவேண்டும், சர்க்கரைபோட்டு உணவூட்ட வேண்டும் என்று யாராவது சொன்னால் அதை கேட்காதீர்கள். குழந்தைக்கு சத்தான உணவுதான் தேவையே தவிர ருசியான உணவு தேவையில்லை.

குழந்தை திட உணவை சில சமயம் எடுக்காது. பொதுவாக பசியாக இருந்தால் திட உணவு அதை உடனே திருப்தி படுத்தாது. இதனால் பாலைத்தான் விரும்பும். சில உணவை விரும்பாவிட்டாலும், சரியான முறையில் குழந்தைக்கு உணவை தராவிட்டாலும், சரியான வெப்பத்தில் உணவை தராவிட்டாலும் குழந்தை திட உணவை சாப்பிட மறுக்கலாம். இப்படிப்பட்ட நிலையில் உணவை சரியாக முறையாக செய்திருக்கிறீர்களா என்பதை சரிபார்த்து கொண்டு குழந்தைக்கு பாலுட்ட வேண்டும்.

Tags:    

Similar News