லைஃப்ஸ்டைல்
குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்

குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்

Published On 2019-07-11 05:39 GMT   |   Update On 2019-07-11 05:39 GMT
பால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு உணவை அறிமுகப்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தைக்கு எப்போது உணவை ஆரம்பிக்க வேண்டும் என்பதை தாயார் தெரிந்து கொள்வது நல்லது.

பால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு உணவை அறிமுகப்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். குழந்தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாது. அலர்ஜி போன்ற தொல்லைகள் வரலாம். உணவு நஞ்சாவது , பேதியாவது போன்றவை ஏற்படும். ஆகவே, உணவு கொடுக்கும் முன்பு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

குழந்தை நான்கு மாதமாக இருக்கும்போது தாய்ப்பால் , பார்முலா பால் அல்லது கதகதப்பான நீரில் தானிய உணவை நன்றாக வேக வைத்து கொடுக்கலாம் . வேகவைத்த ஆப்பிள் மற்றும் வேக வைக்காமல் வாழை மற்றும் பப்பாளி ஆகியவை கொடுக்கலாம்.

காய்கறிகளில் காரட், காலிப்ளவர், உருளை , சர்க்கரை வள்ளி கிழங்கு ஆகியவற்றை வேக வைத்து நன்றாக மசித்து சிறிது சிறிதாக கொடுக்கலாம் . இதை சூப் மாதிரி திரவ வடிவில் கொடுப்பது நல்லது. ஒரு நாளைக்கு ஒரு முறைதான் இந்த உணவை தர வேண்டும். முட்டை தர கூடாது.

ஐந்து மாத குழந்தைக்கு தினமும் இருவேளை உணவு தரலாம். காலையில் குழைந்த சாதம், மாலையில் காய்கறிகள் அல்லது பழம் ஆகியவற்றை தரலாம் . திராட்சையை உரித்து தரலாம், மாம்பழம் தரலாம். முட்டை அல்லது தானியங்கள் தர கூடாது.

ஆறு மாத குழந்தைக்கு வித்தியாசமாக உணவு தரலாம் . இறைச்சியை வேகவைத்து நன்றாக மசித்து தரலாம். உப்பு, பூண்டு, வாசனை பொருட்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் . இந்த குழந்தைகளுக்கு உணவு கொஞ்சம் திடமாக இருக்கலாம். தினமும் இருவேளை உணவு தருவது நல்லது . அதன் பிறகு குழந்தை தவழ ஆரம்பிக்கும்போது விருப்பம் போல உணவூட்டலாம்.
Tags:    

Similar News