வழிபாடு

தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண திருவிழா தொடங்கியது

Published On 2022-10-13 10:59 IST   |   Update On 2022-10-13 10:59:00 IST
  • திருவிழா வருகிற 22-ந்தேதி வரை நடைபெறுகிறது.
  • 20-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
  • 22-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விசுவநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று தொடங்கியது.

இதையொட்டி காலை 6-15 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. திருவிழா வருகிற 22-ந்தேதி வரை நடைபெறுகிறது.

வருகிற 20-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 22-ந் தேதி இரவு 9 மணிக்கு மேல் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. முன்னதாக அன்று மாலை 6 மணிக்கு தெற்கு மாசி வீதியில் காசி விசுவநாதர் உலகம்மனுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், சுவாமி- அம்பாள் வீதி உலா ஆகியன நடக்கின்றன.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, நெல்லை உதவி ஆணையர் கவிதா, கோவில் நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News