வழிபாடு

சென்னையில் உள்ள சிவாலயங்களில் அன்னாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2022-11-08 02:48 GMT   |   Update On 2022-11-08 02:48 GMT
  • உணவை வீணடிப்பது என்பது மிகப்பெரிய பாவம்.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை :

ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று நவக்கிரகங்களில் 'சந்திரன்' தனது சாபம் முழுமையாக தீர்ந்து, 16 கலைகளுடன், பூமிக்கு அருகில் வந்து முழு பொலிவுடன் காட்சி அளிக்கும். முழுமையான ஒளியுடன் இருக்கும் அன்றைய நாளில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. சந்திரனுக்கு உகந்த தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக அரிசியை வடித்து சோறாக மாற்றி ஈசனுக்கு லிங்க திருமேனியில் அன்னத்தால் அபிஷேகம் (அன்னாபிஷேகம்) செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் உள்ள சிவாலயங்களில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி கோவில், திருவேற்காடு வேதபுரீசுவரர் கோவில், எழும்பூரில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அர்த்தநாரீசுவரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. உணவை வீணடிப்பது என்பது மிகப்பெரிய பாவம். உணவு, இறைவனுக்கு சமமானது என்பதை உணர்த்துவதற்காகவே அன்னத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, அதை புனிதமான பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News