வழிபாடு

ரெங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா இன்று தொடக்கம்

Published On 2023-01-13 06:44 GMT   |   Update On 2023-01-13 06:44 GMT
  • இந்த விழா வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
  • பகல் பத்து உற்சவம் 5 நாட்களும், ராப்பத்து உற்சவம் 5 நாட்களும் நடைபெறும்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று முதல் உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து உற்சவம் முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்கி, வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

பகல் பத்து உற்சவம் 5 நாட்களும், ராப்பத்து உற்சவம் 5 நாட்களும் நடைபெறும். இன்று முதல் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே பகல் பத்து உற்சவமான இரண்டாயிரம் திருமொழி பாசுரங்களை 5 நாட்கள் தினமும் மாலையில் கேட்டருளுவார்.

ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழி திருநாள் வருகிற 18-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறுகிறது.

Tags:    

Similar News