வழிபாடு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம்

Published On 2023-03-26 14:19 IST   |   Update On 2023-03-26 14:19:00 IST
  • ராவண அவதாரம் உற்சவம் 30-ந்தேதி நடக்கிறது.
  • 5-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் மிகவும் சிறப்பு பெற்றது. பஞ்சபூத தலங்களில் மண் தலன் என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கொடியேற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பிரம்மோற்சவ விழா 14 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. தினமும் காலையும், மாலையும் இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் ஏலவார் குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் எழுந்தருளி காஞ்சீபுரத்தில் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராவண அவதாரம் உற்சவம் வருகிற 30-ந்தேதி நடக்கிறது. 31-ந்தேதி 63 நாயன்மார்கள் வீதி உலாவும் அன்று மாலை வெள்ளி தேர் உற்சவமும் நடைபெற உள்ளது.

அடுத்த மாதம் 3-ந்தேதி இரவு தல மகிமை காட்சியான வெள்ளி மாவடி சேவையும், 5-ந்தேதி காலை திருக்கல்யாண உற்சவமும் வெகு விமரிசை யாக நடைபெற உள்ளது.

பிரம்மோற்சவ விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News