வழிபாடு

நாளை வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

Published On 2024-04-22 03:13 GMT   |   Update On 2024-04-22 04:14 GMT
  • நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
  • கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது.

மதுரை:

சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வேடத்தில் சுந்தரராஜபெருமாள் கண்டாங்கிபட்டுடுத்தி நேற்று தங்கப் பல்லக்கில் புறப்பட்டார்.

மதுரை நோக்கி வரும் அழகரை வழியெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் பக்தர்கள் திரண்டு வரவேற்றனர். மதுரையில் மூன்று மாவடியில் இன்று காலை 6  மணிக்கு எதிர்சேவை நிகழ்ச்சி நடை பெற்றது. மூன்று மாவடியில் சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றியும் சிறப்பு தீபா ராதனை காட்டியும் அழ கரை மதுரை மக்கள் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து இன்று இரவு தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் அழகர் தங்குகிறார். அங்கு அவர் திருமஞ்சனம் கொள்கிறார். அங்கு அவ ருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.

நாளை காலை தங்க குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து மக்களுக்கு அருள்பாலிக்கிறார். அதன்பின் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பாடாகி ஆயிரம் பொன் சப்பரத்தில் அதிகாலை 3.30 மணி அளவில் எழுந்தருள்கிறார்.

பின்னர் சித்ரா பவுர் ணமி தினத்தன்று முக்கிய நிகழ் வான வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நாளை காலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் நடைபெறுகிறது. இதை தரிசிப்பதற்காக லட்சக்க ணக்கான பக்தர்கள் மதுரையில் இப்போதே குவியத் தொடங்கி விட்டனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அடிப்படை வசதிகளை யும் மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் மேற் கொண்டு வருகிறது.

Tags:    

Similar News