ஆன்மிகம்

பஞ்சகோதர தலங்கள்

Published On 2019-02-22 15:35 IST   |   Update On 2019-02-22 15:35:00 IST
இமயமலைப் பகுதியில் உள்ள தலங்களில் மிகவும் விசேஷம் மிக்க கேதார்நாத் ஆலயத்தோடு சேர்ந்த இன்னும் 4 ஆலயங்களும் இருக்கின்றன. இவை ஐந்தும் சேர்ந்து ‘பஞ்சகோதர தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
இமயமலைப் பகுதியில் உள்ள தலங்களில் மிகவும் விசேஷம் மிக்கது கேதார்நாத் திருத்தலம். இந்த ஆலயத்தோடு சேர்ந்த இன்னும் 4 ஆலயங்களும் இருக்கின்றன. இவை ஐந்தும் சேர்ந்து ‘பஞ்சகோதர தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

அவற்றை சிவபெருமானின் உடலில் உள்ள ஐந்து பாகங்களாக குறிப்பிடுவது வழக்கம். அதன்படி சிவபெருமானின் இடுப்பு தான் கேதார்நாத் என்று சொல்லப்படுகிறது.

துங்கநாத் என்ற திருத்தலம் சிவபெருமானின் தோள் பகுதி என்றும், ருத்ரநாத் ஈசனின் முகம் என்றும், மத் மகேஸ்வரர் கோவில் சிவனின் நாபி (தொப்புள்) எனவும், கல்பேஸ்வரர் ஆலயம் சிவ பெருமானின் திருமுடியாக அமைந்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
Tags:    

Similar News