வழிபாடு

திருவண்ணாமலையில் ஆருத்ரா தரிசனம்- பக்தர்களுக்கு மகாதீப மை விநியோகம்

Published On 2026-01-03 12:33 IST   |   Update On 2026-01-03 12:33:00 IST
  • நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
  • அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனம் விழா நடைபெற்றது.

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று அதிகாலை சிவகாமசுந்தரி தாயார் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் அலங்கார ரூபத்தில் எழுந்தருளிய சிவகாமசுந்தரி தாயார் சமேத நடராஜருக்கு அண்ணாமலை உச்சியில் 11 நாட்கள் எரிந்த மகா தீப கொப்பரையில் இருந்து எடுக்கப்பட்ட மகா தீப மை சாத்தப்பட்டது.

பின்னர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி வந்த நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

ஆங்கில புத்தாண்டின் முதல் பவுர்ணமி என்பதால், ஆருத்ரா தரிசனம் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கார்த்திகை தீப திருவிழாவிற்கு நெய் காணிக்கை கொடுத்த பக்தர்களுக்கு 2 ஆயிரத்து 668 உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட மகா தீப கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட மகா தீப மை விநியோகம் தொடங்கியது. சில தினங்களில் மகா தீப மை முழுமையாக வழங்கப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News