ஆன்மிகம்

பார்வதி தேவியின் மறு உருவம் ‘காளி’

Published On 2018-12-20 06:23 GMT   |   Update On 2018-12-20 06:23 GMT
தீய சக்தியை அழிப்பதற்கான, சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பார்வதி தேவியின் மறு உருவம் ‘காளி’ என்று கூறப்படுகிறது.
தீய சக்தியை அழிப்பதற்கான, சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பார்வதி தேவியின் மறு உருவம் ‘காளி’ என்று கூறப்படுகிறது. காளிதேவி பார்ப்பதற்கு அச்சமூட்டும் வகையில் இருக்கும் பெண் தெய்வமாகும். ‘காளி’ என்பதற்கு கருப்பு என்று பெயர்.

காலம் மற்றும் மரணம் என்பதை குறிக்கும் சொல்லாகவும் கருதலாம். அகண்ட சிவந்த கண்களும், நாக்கினை வெளியே நீட்டிக் கொண்டும், ஆயுதங்களை கையில் ஏந்திய படியும் காளிதேவி தோற்றமளிக்கிறாள். பெண் தெய்வமான துர்க்காதேவி, மகிஷாசூரன் என்ற அசுரனை எதிர்த்து போரிட்டாள்.

மகிஷா சூரனின் படைகளில் இருந்த மற்றொரு அசுரன், ரத்தபாசன். இவனை காளி தேவி வதம் செய்தாள். அவனில் இருந்து வெளிப்பட்ட ரத்தமானது போர்க்களத்தையே மூழ்கடிப்பதாக இருந்தது. அந்த ரத்தத்தை காளிதேவி குடித்து, ரத்தபாசனின் உடலை தூக்கி எறிந்தாள்.
Tags:    

Similar News