ஆன்மிகம்
பெருமாளை திருப்பதி சென்று தரிசிப்பதற்கு ஒப்பானதாக, தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஒன்பது பெருமாள் தலங்கள் அமைந்துள்ளன.
பெருமாளை திருப்பதி சென்று தரிசிப்பதற்கு ஒப்பானதாக, தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஒன்பது பெருமாள் தலங்கள் அமைந்துள்ளன. நவக்கிரகத் தலங்களாகவும் பெருமை பெற்ற இந்த ஆலயங்களை, பெருமாளுக்கு உகந்த ஏகாதசி நாளில் சென்று வழிபடுவது அனைத்து நலன்களையும் நல்கும்.
ஆழ்வார்களில் பெரும் சிறப்பு பெற்ற நம்மாழ்வாரால் பாடப்பட்ட பெருமையும் இந்த நவதிருப்பதிகளுக்கு உண்டு. இந்தப் பாசுரங்கள் திருவாய்மொழியில் இடம் பெற்றுள்ளது.