ஆன்மிகம்

தாமிரபரணி புஷ்கர விழா

Published On 2018-10-01 09:08 GMT   |   Update On 2018-10-01 09:08 GMT
தாமிரபரணி புஷ்கர விழா 12-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடக்க உள்ளது. தாமிரபரணி புஷ்கர திருவிழா நடைபெறும் 12 நாட்களும் மிகவும் விசேஷமானது.
தாமிரபரணி புஷ்கர விழா 12-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடக்க உள்ளது. இந்த புஷ்கர விழாவை உலகம் போற்றுகின்ற வகையில் நடத்த வேண்டும் என்று துறவிகள் சங்கத்தினர், மடாதிபதிகள், ஆதினங்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஏற்பாடு செய்து தங்களுடைய பணியை செய்து வருகிறார்கள்.

தாமிரபரணி புஷ்கர விழா நடத்த பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, அத்தாளநல்லூர், திருப்படைமருதூர், முக்கூடல், அகஸ்தியர் தீர்த்தக்கட்டம் தென்திருப்புவனம், சேரன்மாதேவி, மேலசெவல், தேவமாணிக்கம், சுத்தமல்லி, கோடகநல்லூர், பழவூர், திருவேங்கடநாதபுரம், கொண்டாநகரம், நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவில் படித்துறை, தைப்பூச மண்டபம் படித்துறை, நெல்லை வண்ணார்பேட்டை மணிமூர்த்தீசுவரம், எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயூத்துறை, சீவலப்பேரி, முறப்பநாடு, ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, ஏரல், ஆத்தூர், புன்னக்காயல் ஆகிய இடங்களில் உள்ள படித்துறைகளில் அரசு அனுமதி அளித்து இருந்தது.

தற்போது நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை, தைப்பூச மண்டபம் படித்துறை ஆகிய 2 இடங்களில் பாதுகாப்பு இல்லை என்று கூறி அரசு அனுமதி மறுத்து உள்ளது. மற்ற இடங்களில் புஷ்கர விழா நடத்தவும், மக்கள் புனித நீராடவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News