ஆன்மிகம்

பயன், எதிரிகள் தொல்லை போக்கும் நரசிம்மர் ஸ்லோகம்

Published On 2017-07-23 09:18 GMT   |   Update On 2017-07-23 09:18 GMT
கடன், பயம், எதிரிகள் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த நரசிம்மர் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
திருக்கடிகை ஸ்ரீயோக நரசிம்ம ஸ்வாமிக்கு மங்களம்
மாமலையாம் திருக்கடிகையில் வாழ்பவரே உமக்கு மங்களம்
தேவர்களும் முனிவர்களும் வணங்கிடும் பெருமாளே உமக்கு மங்களம்
திருமகள் வாழ்கின்ற திருமார்புடைய ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம்
அரங்கத்தில் வாழும் அடியார்கள் தொழும் பெருமாளே உமக்கு மங்களம்

தீமைகளை அழித்து வேண்டும் வரம் அருளும் நரசிம்மா உமக்கு மங்களம் வைசாக முழுமதியில் ஸ்வாதி திருநாளில் அவதரித்த பெருமாளே உமக்கு மங்களம் அபயவரத ஹஸ்தங்களுடன் ஆனந்தம் அருளும் நரசிம்மா உனக்கு மங்களம் வாரணசி கயை, ப்ரயாகையிலும் புகழ் மிக்க் திருக்கடிகைப்பெருமாளே உமக்கு மங்களம் வானவரும மண்ணவரும போற்றிடும் அக்காரக்கனி ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம் சீர்மிகு சிறிய திருவடிக்கு ஸங்கம் சக்கரம் அருளிய பெருமாளே உமக்கு மங்களம் ஸ்ரீ அம்ருதபல வல்லி நாயகி ஸமதே ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம் மங்களம் மங்களம்

நரமிம்மனையும் ஆஞ்சநேயரையும் துதித்து அகமகிழ்வோம்.

Tags:    

Similar News