ஆன்மிகம்

செல்வம் பெருக, தான்ய வளம் கொழிக்க அன்னபூர்ணாஷ்டகம்

Published On 2017-06-08 03:02 GMT   |   Update On 2017-06-08 03:02 GMT
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்துதியை தினமும் சொல்லி வந்தால் தேவியின் திருவருளால் செல்வம் பெருகும்; உணவுப் பஞ்சம் இல்லாத வாழ்வு கிட்டும்.
தேவி ஸர்வவிசித்ர ரத்னரசிதா தாக்ஷாயணீ சுந்தரீ
வாமாச்வாது பயோதரா ப்ரியகரி ஸௌபாக்ய மாஹேச்வரி
பக்தாபீஷ்டகரி சதாசுபகரி காசிபுராதீச்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்ன பூர்ணேஸ்வரி

- ஆதி சங்கரர் அருளிய அன்னபூர்ணாஷ்டகம்

பொதுப்பொருள்:


அரிய ஆபரணங்கள் அணிந்த என் அன்னையே, அம்பிகையே நமஸ்காரம். தட்சன் பெற்ற பேரழகியே, பரமனில் பாதியே, பேரெழில் ஜோதியே, குணக்குன்றே, குலவிளக்கே, அடியார்க்கு அருள்பவளே, நலன்கள் நல்கும் நாயகியே, காசிநகர் மேவும் தாயே, நமஸ்காரம். பிச்சை எனக்கு அளித்து பேரருள் புரிவாய், அன்னபூரணி தேவியே.
Tags:    

Similar News