ஆன்மிகம்

திருமணத்தடை, குழந்தை பாக்கியம் அருளும் ஸ்லோகங்கள்

Published On 2017-05-29 05:55 GMT   |   Update On 2017-05-29 05:55 GMT
குரு பகவானுக்கு உகந்த இந்த ஸ்லோகங்களை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் விரதமிருந்து சொல்லி வந்தால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
வியாழக்கிழமைகளில் குரு பகவானை நினைத்து மேற்கொள்ளும் விரதம் ‘குரு வார விரதம்’ ஆகும். இந்த விரதம் இருப்பவர்கள் மஞ்சள் ஆடை அணிந்து குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும். செல்வச்செழிப்பு மேலோங்கும். சுக வாழ்வு, மன நிம்மதி கிடைக்கும். அறிவு விருத்தியடையும். மற்ற கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குரு சுலோகம் :

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

குரு மந்திரம் :

‘தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் திரிலோகேஸம்
தம் நமமி பிருகஸ்பதிம்’

குரு பகவான் காயத்ரி :

‘வருஷபத் வஜாய வித்மஹே
க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு ப்ரசோதயாத்’
Tags:    

Similar News