ஆன்மிகம்

துன்பம் போக்கும் தசாவதார ஸ்தோத்திர மாலை

Published On 2017-05-15 08:22 GMT   |   Update On 2017-05-15 08:22 GMT
வறுமை, துன்பம், எதிரிகளின் தொல்லை, தொழிலில் நஷ்டம் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இந்த ஸ்லோகம் தினமும் சொல்லி வந்தால் பலன் நிச்சயம்.
1. ஆதியாய் அனாதியாகி ஆதிமூலப் பொருளுமாகி
ஆலிலையில் பள்ளி கொண்ட ஆதி மூலமே -ஓம் நமோ

2. பக்தர்களைக் காக்க வேண்டி பத்துவித வேடங்கொண்டு பல
பலவாம் லீலை செய்த புண்ணிய மூர்த்தியே -ஓம் நமோ

3. மத்ஸயமாகி நீரில் மூழ்கி மறைகள் நான்கும் தூக்கி வந்து
மாபெரும் பணியைச் செய்த மாயா மூர்த்தியே -ஓம் நமோ

4. மூழ்கி மறைந்த மந்திர கிரியை மத்தாக்கி கடல் கடையமுங்கி
முதுகில் சுமந்து நின்ற மனோமோகனா -ஓம் நமோ

5. பன்றியாகி ரூபம் கொண்டு பாதாளத்தில் புகுந்து சென்று
பூமிதனை தூக்கி வந்த புண்ணிய ரூபனே -ஓம் நமோ

6. சின்னஞ்சிறு பக்தன் வாக்கை சத்தியமாக்கிக் காட்ட வேண்டி
சபையில் தூணில் சாடிவந்த சத்திய மூர்த்தியே -ஓம் நமோ

7. அகிலாண்ட மத்தனையும் அடியிரண்டால் அளந்த பின்பு
அசுரன் தலையில் அடியை வைத்த ஆதி தெய்வமே -ஓம் நமோ

8. பரசுதனைக் கையில் கொண்டு பரமன் ராமன் எதிரில் வந்து
பத்மனாபன் தனுஸைத் தந்த பார்க்கவ ராமா -ஓம் நமோ

9. மமதை கொண்ட ராவணனை மூலமுடன் அழிக்க வேண்டி
மானிடனாய் அவதரித்த மாயா மூர்த்தியே -ஓம் நமோ

10. அண்ணனாகி சேவை செய்ய ஆர்வமுடன் கலப்பை ஏந்தி
அரும்பணிகள் பலவும் செய்த ஆதிஜோதியே -ஓம் நமோ

11. கர்வம் கொண்ட கம்ஸன் தனை கூண்டுடனே அழிக்க
வேண்டி கிருஷ்ணாவதாரம் செய்த கருணாமூர்த்தியே -ஓம் நமோ

12. கலியுகத்தில் கஷ்டம் போக்க குதிரை மீதிலேறிக் கொண்டு
கல்கியாக வரப்போகும் சாகுந்த ராமா -ஓம் நமோ

13. கலியுகத்தில் மக்களுக்கு கைவல்யம் கையில் தர குருவாயூரில்
கோயில் கொண்ட கிருஷ்ண மூர்த்தியே -ஓம் நமோ

14. ஆணவத்தால் அறிவிழந்து அகந்தை கொண்ட எந்தனுக்கு
அறிவையூட்டி ஆதரிக்கும் ஆதிமூலமே -ஓம் நமோ

15. பண்ணும் பாட்டும் அறியாத பித்தன் எனைப் பாடவைத்து
பக்தனாக்கப் பாடுபடும் புண்ய ரூபனே -ஓம் நமோ

16. நாமம் நம்பி சொல்பவர்க்கு நற்கதியைத் தருவேன் என்று
நின்றலறி சத்தியம் செய்த நிகமவேத்யனே -ஓம் நமோ

17. நாமம் சொல்லும் இடந்தன்னிலே நித்ய வாசம் செய்வேனென்று
நாரதர்க்கு உறுதி தந்த நித்ய வஸ்துவே -ஓம் நமோ

18. பூர்ணாவதாரம் கொண்டு பதினாறு கலைகள் கொண்டு
பவனபுரம் வந்தடைந்த பூரண ரூபனே -ஓம் நமோ
Tags:    

Similar News