கிரிக்கெட்

சூர்ய குமார் யாதவ்- சச்சின் டெண்டுல்கர்

சூர்ய குமாரின் அந்த ஷாட் அற்புதம்- மனம் திறந்து பாராட்டிய சச்சின்

Published On 2022-07-11 10:33 GMT   |   Update On 2022-07-11 10:33 GMT
  • கடைசி வரை வெற்றிக்காக போராடிய அவர் 55 பந்துகளில் 117 ரன்கள் குவித்து 19-வது ஓவரில் ஆட்டம் இழந்தார்.
  • இந்த போட்டியில் நீங்கள் பல அற்புதமான ஷாட்டுகளை விளையாடி அசத்தினீர்கள்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 215 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேவிட் மலான் 77 ரன்கள் குவித்தார். 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

31 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து சூர்யகுமார் யாதவ்-ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முக்கியமாக சூர்யகுமாரின் ஆட்டம் மிரட்டலாக இருந்தது. கடைசி வரை வெற்றிக்காக போராடிய அவர் 55 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்கள் என 117 ரன்கள் குவித்து 19-வது ஓவரில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமாரின் ஆட்டத்தை புகழ்ந்து முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானும் ஆன சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்ய குமார் யாதவை வாழ்த்தி சில கருத்துக்களை பகிர்ந்து உள்ளார்.


Amazing 💯@surya_14kumar!

டுவிட்டரில் சச்சின் கூறியதாவது:-

இந்த போட்டியில் நீங்கள் சில கண்கவர் ஷாட்டுகளை விளையாடி அசத்தினீர்கள். அதிலும் சில ஷாட்கள் மறக்கமுடியாத அளவில் பிரம்மிப்பாக இருந்தது. குறிப்பாக பாயிண்ட் திசையில் ஸ்கூப் செய்து அடித்த சிக்சர் அபாரம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாயிண்ட் திசையில் ஸ்கூப் செய்து அடித்த சிக்சர் புகைப்படத்தை பகிர்ந்து சச்சின் டெண்டுல்கர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News